Sunday, 31 July 2016

Consumer

தகவல் அறியும் உரிமைச் சட்டம் ... ! வழக்கறிஞர் ராசா துரியன்
‹ Home
View web version
Friday, 27 March 2015
Advocate Rasa Dhuriyan at 07:03
No comments:
உண்மை ஊமையாகி தலைகவிழ
பொய் சபையிலேறி இறுமாப்புடன்
சப்தமிட்டு சிரிக்கும்
வானுக்கு தூணுண்டு என்பதையும்
கடலுக்கு தாழ் உண்டு என்பதையும்
வக்கீலின் வாதத் திறமை நிரூபிக்கும்
உடைமை கொள்ள, உயிர் கொல்ல
இடையில் மறைத்த உடைவாளை
இரக்கமின்றி இதயத்தில்
பாய்ச்சுவான் ஒருவன்
பிறர் உயிர் துடிக்க சகியாது
அதை ஓடி வந்து பிடுங்கி
காப்பாற்ற நினைப்பான்
கருணையுள்ள ஒருத்தன்
கடைசியில் கருணை மனிதனை
காக்கிச் சட்டைகள்
அள்ளிக் கொண்டு
சிட்டாய்ப் பறக்கும்
கடுங் காவலில் வைக்கும்
நீதியை வேண்டி
கறுப்புக் கோட் வாதாட
காக்கிச் சட்டைகள்
கண்ணால் கண்டதைச் சொல்லும்
அந்தக் கைதிக்கோ இவர்கள்தான்
கடவுள் அன்று
கைரேகை சாட்சியம்
கருணை உள்ளவனை
காட்டிக் கொடுக்க
கட்டியங் கூறும்
கம்பியின் பின்னால்
கைதியாய் அவன் நிற்க
சட்டைப் பைக்குள் துட்டைத் திணித்து
சட்டத்தை விலைக்கு வாங்கி
தப்பித்து விடுவான்
சமர் செய்த சண்டாளன்
“தகுந்த சாட்சியம் இல்ல”
சட்டம் சப்தமின்றி உறங்கிப் போகும்.
Share
Saturday, 21 March 2015
Advocate Rasa Dhuriyan at 02:20
No comments:
Government Law College, Chengalpattu
Share
Thursday, 19 March 2015
Advocate Rasa Dhuriyan at 06:16
No comments:
"மனித உரிமை'
"மனித உரிமை' என்ற வார்த்தையை, தனியார் அமைப்புகள் பயன்படுத்த கூடாது என்ற உத்தரவை மீறி செயல்பட்ட, ஆறு தனியார் அமைப்புகள் மீது, போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்
மனித உரிமை ஆணையத்தின் வேண்டுகோளின்படி, சென்னை உயர்நீதிமன்றம், மனித உரிமைகள் (ஏதட்ச்ண கீடிஞ்டtண்) என்ற வார்த்தையை, எந்தவித தனியார் அமைப்புகளும் பயன்படுத்தக் கூடாது என, தடை உத்தரவிட்டுள்ளது. இருந்தும், நாமக்கல் மாவட்டத்தில், ஒருசில தனியார் தன்னார்வ அமைப்புகள், மனித உரிமைகள் கழகம் என்ற அர்த்தத்தில் நடத்தி வருகின்றன.மனித உரிமைகள் அமைப்பு என்ற பெயரில், பொதுமக்களிடம் தவறான அணுகுமுறையை கையாண்டு வருவதாக, புகாரும் வந்தது. அதன்பேரில், மாவட்ட சட்ட ஒழுங்கு ஆலோசனை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. மேலும், நீதிமன்ற உத்தரவை மீறி செயல்படும் அமைப்பு மீது நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டது.அதையடுத்து. நாமக்கல், புதுச்சத்திரம், மோகனூர், பள்ளிபாளையம், ப.வேலூர், ஜேடர்பாளையம் ஆகிய ஆறு போலீஸ் ஸ்டேஷன் எல்லையில், செயல்பட்டு வந்த ஆறு அமைப்புகள் மீது, போலீஸாரால் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.எனினும், "மனித உரிமை' என்ற வாசகத்தை அடிப்படையாக கொண்டு செயல்படும், தனியார் அமைப்புகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அவ்வாறு, ஏதேனும் அமைப்புகள் செயல்பட்டால், பொதுமக்கள், மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்கலாம் என, மாவட்ட கலெக்டர் தட்சிணாமூர்த்தி மற்றும் எஸ்.பி., செந்தில்குமார் ஆகியோர் தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
திண்டுக்கல்லில் அரசு அனுமதியின்றி செயல்பட்டு வந்த 3 மனித உரிமைகள் அமைப்பு மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். அனுமதியின்றி மனித உரிமைகள் என்ற பெயரில் செயல்படும் அமைப்புகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு உயர்நீதி மன்றம் உத்தரவு பிறப்பித்தது.
அதன்படி திண்டுக்கல் மெங்கில்ஸ் ரோட்டில் நாகேந்திரன் தலைமையிலான மனித உரிமைகள் மற்றும் சர்வதேச அமைப்பு, ரவுண்டு ரோடு பகுதியில் பாலமுருகன் குழு சார்பில் செயல்பட்டு வந்த மனித உரிமை கழகம், ஏஎம்சி சாலையில் தென்னிந்திய மனித உரிமை கழகம் என்ற பெயரில் நடத்தி வந்த முருகேசன் குழுவை சேர்ந்தவர்கள் மீது திண்டுக்கல் நகர் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் பரவாசுதேவன் வழக்குப்பதிவு செய்தார்.மேலும் அனுமதியின்றி மனித உரிமைகள் என்ற பெயரில் செயல்படும் அமைப்புகளை போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இதுபோன்ற அமைப்புகளிடம் பொதுமக்கள் சென்று ஏமாறவேண்டாம் என்றும் போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
நெல்லை மாவட்டத்தில் மனித உரிமைகள் (ஹியூமன் ரைட்ஸ்) என்ற அடைமொழியுடன் பல்வேறு அமைப்புகள் செயல்பட்டு வருகிறது. இதில் பதிவு செய்யப்படாமல் போலியாக செயல்படும் அமைப்புகள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நரேந்திரன்நாயர் உத்தரவிட்டுள்ளார்.
இதன் பேரில் அந்தந்த போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட இடங்களில் ‘‘மனித உரிமைகள்’’ என்ற அடைமொழியுடன் பதிவு செய்யப்படாத போலியாக செயல்படும் அமைப்புகள் உள்ளதா? என்று போலீசார் நேற்று பல்வேறு இடங்களில் அதிரடி சோதனை நடத்தினார்கள்.
இதில் அம்பையில் செயல்பட்டு வரும் ஒரு அமைப்பு போலியாக செயல்பட்டு வந்தது கண்டு பிடிக்கப்பட்டது. அந்த நிறுவனத்தினர் பயன்படுத்திய ரப்பர் சீல்கள், கார்டுகள் போன்றவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக அந்த அமைப்பை நடத்திய அம்பையை சேர்ந்த சுப்பிரமணியன், ஆனந்தி ஆகிய 2 பேர் மீது அம்பை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
கடையநல்லூர் முத்துகிருஷ்ணாபுரத்தில் மணிகண்டன் என்பவரும் இது போல போலியாக அமைப்பு நடத்தி வந்தது கண்டு பிடிக்கப்பட்டது. அவர் மீது கடையநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
சிவகிரியில் டேனியல் என்பவர் போலியாக மனித உரிமைகள் என்ற பெயரில் அமைப்பு நடத்தி வந்துள்ளார். அவரிடமும் சீல் முதலியவைகள் பறிமுதல் செய்யப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளன. இதுபோல மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் போலீசார் சோதனை நடத்தி வருகிறார்கள்.
"மனித உரிமை' என்ற
வார்த்தையை, தனியார்
அமைப்புகள் பயன்படுத்த
கூடாது என்ற உத்தரவை மீறி
செயல்பட்ட, ஆறு தனியார்
அமைப்புகள் மீது, போலீஸார்
Share
Advocate Rasa Dhuriyan at 06:14
No comments:
நுகர்வோர் மன்றத்தில் புகாரளிப்பது எப்படி?
ஒரு நுகர்வோர் பணம் கொடுத்து வாங்கிய பொருளில் அல்லது பெற்ற சேவையில் குறைபாடு ஏதேனுமிருப்பின் நுகர்வோர் மன்றத்தில் புகாரளிக்கலாம். அதன் மூலம் தவறு செய்தோருக்கு தண்டனையோ, அபராதமோ வாங்கித்தர முடியும். நுகர்வோருக்கான நஷ்ட ஈட்டையும் பெற முடியும். இதற்காக 24 டிசம்பர் 1986 அன்று கொண்டுவரப்பட்டது நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம். இதன்படி வங்கி, காப்பீடு, நிதி, போக்குவரத்து, பொழுதுபோக்கு, மருத்துவ சேவை, உணவு விடுதி, மின்சாரம் என எந்த விஷயங்களில் நுகர்வோரின் உரிமைகள் பறிக்கப்பட்டாலும் நுகர்வோர் மன்றத்தை அணுகலாம். நுகர்வோர் மன்றத்தில் புகாரளிப்பது எப்படி? என்னென்னெ ஆவணங்கள் தேவை ஆகிய விவரங்களை இங்கே பார்க்கலாம்.
நுகர்வோர் என்பவர் யார்?
ஒரு பொருளையோ, ஒரு சேவையையோ பணம் கொடுத்துப் பெறும் யாவரும் நுகர்வோர்களே.
உதாரணமாக: மளிகைக் கடையில் பொருள் வாங்கினாலும், மருத்துவமனையில் காய்ச்சலுக்குப் பார்த்தாலும் நீங்கள் நுகர்வோரே.
யார் / யாரெல்லாம் புகாரளிக்கலாம்?
ஒரு சேவையைப் பெறுகிற, பொருளை வாங்குகிற எந்த ஒரு நுகர்வோரோ, பதிவு செய்த தன்னார்வ நுகர்வோர் அமைப்புகளோ புகார் அளிக்கலாம். தனி நபராகவோ, ஒரே நோக்கம் கொண்ட பல நுகர்வோர்களின் சார்பாக கூட்டாகவோ புகாரளிக்கலாம்.
ஒரு சேவையை அல்லது பொருளை மற்றவர்களுக்கு விற்பதற்காக வாங்குகிற அல்லது மதிப்புக் கூட்டி விற்கிறவர்கள் நுகர்வோர் அல்ல.
ஏன் நுகர்வோர் மன்றத்தில் புகாரளிக்க வேண்டும்?
காலதாமதம் ஏற்படுவதைத் தவிர்த்து குறுகிய காலத்திலும், அதே சமயம் அதிக செலவில்லாமலும் நுகர்வோருக்கு நிவாரணம் கிடைக்க எல்லா மாவட்டங்களிலும் நுகர்வோர் மன்றம் செயல்படுகின்றன.
நுகர்வோருக்கு சேவைக்குறைபாடு ஏற்பட்டு அதை கடிதம் வாயிலாக சம்பந்தப்பட்டவருக்குத் தெரிவித்தும் அதற்கு நடவடிக்கை ஏதும் எடுக்காத பட்சத்தில் நுகர்வோர் மன்றத்தை அணுக வேண்டும்.
எங்கே புகாரளிப்பது?
நுகர்வோர் எந்த நுகர்வோர் குறைதீர் மன்றத்தின் அதிகார வரம்பிற்குட்பட்ட எல்லைக்குள் இருக்கிறாரோ அங்கே புகாரளிக்கலாம் அல்லது எந்த இடத்தில் பொருள் வாங்கப்பட்டதோ அல்லது எந்த இடத்தில் நுகர்வோர் உரிமை மீறப்பட்டதோ அந்த இடத்திற்குட்பட்ட மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றத்தில் புகாரளிக்கலாம்.
எப்படி விண்ணப்பிப்பது?
ஒரு வெள்ளைத்தாளில் (நான்கு நகல்கள்) முழு விவரங்களையும் பதிவு செய்து, இதற்கான அனைத்து ஆவண நகல்களையும் இணைத்து பொருள் மதிப்பிற்குத் தகுந்தவாறு நுகர்வோர் குறைதீர் மன்றத்தில் நேரடியாகவோ, பதிவுத் தபால் மூலமாகவோ, தொலைநகல் மூலமாகவோ, விரைவுத் தபால் மூலமாகவோ வழக்குகளைப் பதிவு செய்து, இந்த வழக்கின் நகலை எதிர்த்தரப்பாளருக்கும் அனுப்பி வைக்க வேண்டும். இதற்கு முத்திரைத்தாள் கட்டணம் ஏதும் செலுத்தத் தேவையில்லை.
கட்டணம் எவ்வளவு?
1 லட்சம் ரூபாய் வரை நஷ்ட ஈடு கோரும் வழக்குகளுக்கு = a100 /-
1 லட்சத்திற்கு மேல் 5 லட்சம் வரை = 200 /-
5 லட்சத்திற்கு மேல் 10 லட்சம் வரை = 400 /-
10 லட்சத்திற்கு மேல் 20 லட்சம் வரை = 500 /-
நுகர்வோர் மன்றத்தில் புகாரளிக்கத் தேவையான தகுதிகள்:
· புகாரளிப்பவர் நுகர்வோராக இருக்க வேண்டும் அல்லது அவர் சம்பந்தப்பட்டதாக இருக்க வேண்டும்.
· சேவைக் குறைபாடு அல்லது பிரச்சினை ஏற்பட்டு இரண்டு வருடங்களுக்குள் புகாரளிக்க வேண்டும்.
· எந்த ஒரு புகாருக்கும் ஆதாரங்கள் இருக்க வேண்டும்.
என்னென்ன ஆவணங்கள் சமர்ப்பிக்க வேண்டும்?
நுகர்வோர் மன்றத்தில் புகாரளிக்க ஆதாரங்கள் அவசியம். எனவே எந்த சேவைக் குறைபாடு ஏற்படுகிறதோ அவர்களிடம் முதலில் புகார் செய்ததற்கான ஒளி நகல், பொருள் / சேவை பெற்ற ரசீதுகள், கடிதப் போக்குவரத்துகள் என அனைத்து ரசீதுகளின் நகல்களையும் சமர்ப்பிக்க வேண்டும். சேவைக் குறைபாட்டைப் பொறுத்து
ஆதாரங்களின் தன்மையும் வேறுபடும்.
யார் மீதெல்லாம் புகாரளிக்க முடியும்?
நுகர்வோருக்குப் பொருட்களை விற்பனை செய்யும், பணம் பெற்றுக் கொண்டு சேவையை வழங்கும் எந்த நிறுவனத்தின் மீதும் புகாரளிக்க முடியும். அரசுத் துறை, தனியார் துறை என்ற பாகுபாடு கிடையாது.
ஆன்லைனில் புகாரளிக்க:
· நுகர்வோர் மன்றத்தை அணுகும் முன் பேச்சுவார்த்தைக்கு அல்லது உடனடி நிவாரணம் கிடைக்க மாநில நுகர்வோர் உதவி மையத்தை அணுகலாம். நுகர்வோர் தனக்கு ஏற்பட்ட சேவைக் குறைபாட்டைக் கூறி அதற்கு ஆலோசனை பெறலாம். பின்னர் இவர்களது வழிகாட்டுதலின்படி நுகர்வோர் மன்றத்தை அணுகலாம்.
· மாநில நுகர்வோர் உதவி மையத்தின் தொடர்பு எண் 044 – 2859 2828. இந்த எண்ணுக்கு அழைத்ததும் 9 என்ற எண்ணை அழுத்தினால், புகார்களை தெரிவிக்கலாம். 1 என்ற எண்ணை அழுத்தினால், நுகர்வோருக்கான உரிமைகள் என்ன? நுகர்வோரின் கடமைகள் என்ன போன்ற விவரங்களைப் பதிவு செய்யப்பட்ட குரலில் கேட்கலாம்.
· consumer@tn.gov.in, schtamilnadu@gmail.comஎன்ற மின்னஞ்சலிலோ, மாநில நுகர்வோர் உதவி மையம், உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை, 4-ஆவது தளம், எழிலகம், சேப்பாக்கம், சென்னை – 5 என்ற முகவரியில் தபாலிலோ, நேரிலோ புகார் அளிக்கலாம்.
www.consumer.tn.gov.in என்கிற இத்தளத்திற்கும் செல்லலாம்.
விரிவான விளக்கங்களை உதாரணங்களுடன், ‘புதிய தலைமுறை’ வெளியிட்டிருக்கும் ‘கன்ஸ்யூமர்கள் கவனிக்கவும்’ என்ற நூலில் தெரிந்துகொள்ளலாம். இந்தப் புத்தகத்தை தபாலில் பெற 044-45969717 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம்.

No comments:

Post a Comment